நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

nilgiris moist vigil2 - 2026நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவுவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை, கேரளா தமிழ் நாடு எல்லை பகுதி களில் M.S.T மற்றும் STF படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி., சண்முகபிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குன்னூர் அருகேயுள்ள ‘நெடுகல்கம்பை’ ஆதிவாசி கிராமத்திற்கு வந்தனர். ஒரு பெண் உட்பட 6க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் வந்து அப்பகுதி மக்களிடம் உணவுகள் வாங்கி உண்டு பல மணி நேரம் அங்கு தங்கியிருந்துவிட்டு, பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தனர்

இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியும் மாவோயிஸ்டுகள் சிக்கவில்லை. இதை அடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

அன்று முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் புகைப்படத்துடன் மாவோஸ்ட் குறித்த அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக பதவியேற்ற எஸ்பி., சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம்  பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது 100 சதவீதம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை; இருப்பினும் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க N.S.T 3 குழுக்கள்  மற்றும் S.T.F படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

nilgiris moist vigil - 2026

தினந்தோறும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் கேரளா எல்லை பகுதிகளும் கர்நாடக எல்லை பகுதிகளும் சேர்வதால் அப்பகுகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆதிவாசி மக்களிடம் சந்தேகப்படும் புதிய நபர்கள் யாராவது தென் பட்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்துமாறு கூறி வருகிறார்கள்.

கேரளா எல்லைப் பகுதியான மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றி பாதுகாப்புக்காக மணல் மூட்டைகளை அடுக்கியும், நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், இரவில் அதிக ஒளிதரும் விளக்குகள் வைத்து கேமரா பதிவுகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories