நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

nilgiris moist vigil2 - 2026நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவுவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை, கேரளா தமிழ் நாடு எல்லை பகுதி களில் M.S.T மற்றும் STF படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி., சண்முகபிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குன்னூர் அருகேயுள்ள ‘நெடுகல்கம்பை’ ஆதிவாசி கிராமத்திற்கு வந்தனர். ஒரு பெண் உட்பட 6க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் வந்து அப்பகுதி மக்களிடம் உணவுகள் வாங்கி உண்டு பல மணி நேரம் அங்கு தங்கியிருந்துவிட்டு, பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தனர்

இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியும் மாவோயிஸ்டுகள் சிக்கவில்லை. இதை அடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

அன்று முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் புகைப்படத்துடன் மாவோஸ்ட் குறித்த அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக பதவியேற்ற எஸ்பி., சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம்  பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது 100 சதவீதம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை; இருப்பினும் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க N.S.T 3 குழுக்கள்  மற்றும் S.T.F படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

nilgiris moist vigil - 2026

தினந்தோறும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் கேரளா எல்லை பகுதிகளும் கர்நாடக எல்லை பகுதிகளும் சேர்வதால் அப்பகுகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆதிவாசி மக்களிடம் சந்தேகப்படும் புதிய நபர்கள் யாராவது தென் பட்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்துமாறு கூறி வருகிறார்கள்.

கேரளா எல்லைப் பகுதியான மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றி பாதுகாப்புக்காக மணல் மூட்டைகளை அடுக்கியும், நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், இரவில் அதிக ஒளிதரும் விளக்குகள் வைத்து கேமரா பதிவுகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories