February 22, 2026, 11:25 AM
29.6 C
Chennai

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

nilgiris moist vigil2 - 2026நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவுவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை, கேரளா தமிழ் நாடு எல்லை பகுதி களில் M.S.T மற்றும் STF படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி., சண்முகபிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குன்னூர் அருகேயுள்ள ‘நெடுகல்கம்பை’ ஆதிவாசி கிராமத்திற்கு வந்தனர். ஒரு பெண் உட்பட 6க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் வந்து அப்பகுதி மக்களிடம் உணவுகள் வாங்கி உண்டு பல மணி நேரம் அங்கு தங்கியிருந்துவிட்டு, பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தனர்

இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியும் மாவோயிஸ்டுகள் சிக்கவில்லை. இதை அடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

அன்று முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் புகைப்படத்துடன் மாவோஸ்ட் குறித்த அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக பதவியேற்ற எஸ்பி., சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம்  பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது 100 சதவீதம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை; இருப்பினும் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க N.S.T 3 குழுக்கள்  மற்றும் S.T.F படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

nilgiris moist vigil - 2026

தினந்தோறும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் கேரளா எல்லை பகுதிகளும் கர்நாடக எல்லை பகுதிகளும் சேர்வதால் அப்பகுகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆதிவாசி மக்களிடம் சந்தேகப்படும் புதிய நபர்கள் யாராவது தென் பட்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்துமாறு கூறி வருகிறார்கள்.

கேரளா எல்லைப் பகுதியான மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றி பாதுகாப்புக்காக மணல் மூட்டைகளை அடுக்கியும், நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், இரவில் அதிக ஒளிதரும் விளக்குகள் வைத்து கேமரா பதிவுகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories