புழல் சிறையில் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை: வெளியான படங்களால் அதிர்ச்சி!

terrorist gang in puzal prison - 2026

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல்  படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்தி  வருவது, புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவது குறித்து வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட ஹோம் தியேட்டர், பாலியல் படம் பார்க்க டிவி, செல்பி எடுக்க ஸ்மார்ட் போன்கள் என சொகுசு வாழ்க்கை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், ஷட்டில் விளையாட உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க பிளாஸ்க், தினமும் கறி, மீன், முட்டை என ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என சகல வசதிகளுடனும் சிறையில் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தாருடன் வீடியோ காலிங், கூட்டாளிகளுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுக்க ரகசிய மொபைல் போன்களுடன் வாழ்க்கை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதனால் சிறையில் காவலர் துவங்கி உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் கொடுத்து புழல் சிறையை சொகுசு விடுதி போல பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே, இன்று காலை புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார் சிறைத்துறை டிஐஜி. பின்னர், முதல் வகுப்பில் உள்ள கைதிகளுக்கான சொகுசு வசதிகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி தெரிவித்துள்ளார்.

சிறையில் கைதிகளுக்கு செல்ஃபோன்களை யார் கொடுத்தது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது என்று டிஐஜி முருகேசன் கூறினார்.

புழல் சிறையின் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைத்துறை டிஐஜி முருகேசன் நடத்திய ஆய்வில் 2 எஃப்எம் ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

18 டிவி, எப் எம் ரேடியோ இரண்டு என இந்தப் பொருள்கள் மறைத்துக் கொண்டு போகும் அளவுக்கு சிறிய பொருளா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories