திருச்சி: திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. புகழ்பெற்ற சக்தி திருத் தலமாக விளங்கும் உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் சித்திரைப் பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப். 5-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6-ம் தேதி காப்புக் கட்டுதலும், இரவு அம்மன் கேடயத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு பூத வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து கயிலாய, காமதேனு, சிம்மம், யானை, அன்னம் குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் வெக்காளியம்மன் வீதியுலா வருதல் நடைபெறுகிறது: சித்திரைப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது. 10-ம் திருநாளான ஏப்ரல் 15-ம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா வருதலும், 11-ம் திருநாளான ஏப்ரல் 16-ம் தேதி அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் தேர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari