January 17, 2025, 7:55 AM
24 C
Chennai

கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 6 வழக்கு பதிவு: சகாயம் அதிரடி

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்.  குவாரிகளுக்கு அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போது குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் புகார் மனுக்களை அளித்தனர். அதன்படி மதுரை கிழக்கு தாலுகா,  ஜாங்கிட்நகர்,  திருமோகூர், ராஜாக்கூர் ஆகிய பகுதி மக்கள் அளித்த கிரானைட் புகார் மனு குறித்து விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிடம் ஐஏஎஸ்அதிகாரி  சகாயம்தெரிவித்தார். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஒத்தக்கடை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி.  நிறுவனம் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பி.ஆர்.பி. நிறுவனம் மீது ஒத்தக்கடை போலீசார் மேலும்  6 வழக்குகளை இன்று பதிவு செய்துள்ளனர்.  கிரானைட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே பி.ஆர்.பி .நிறுவனம் மீது  100–க்கும் மேற்பட்ட  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.08-04-15 Granite News photo 01 08-04-15 Granite News photo 02

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!