பாராட்டுகளைப் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்! 60ம் கல்யாணத்தை திருக்கடவூரில் நடத்தி ஹிந்து தன்மையை நிரூபித்தார்!

tamilachi thangapandian 60th marriage function1 - 2026

ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன். அதற்காகவே அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் அடுத்தவரின் தாலியை அறுப்பதுதான் திராவிடக் கொள்கை என்று நிலைநாட்டப் பட்டு விட்ட இந்நாளில், திராவிடக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பமான மறைந்த திமுக அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப் பாண்டியன், தனது 60 ஆம் ஆண்டு திருமண நிறைவு விழாவை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி திருக்கோவிலில் ஹோமம் வளர்த்து, ஹிந்து மத சடங்குகளைச் செய்து, முறைப்படி நடத்திக் கொண்டார்.

thamilachchi thangapandiyan - 2026

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எனும் புனை பெயரால் அறியப்படும் சுமதி, திமுக., குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில், கனிமொழி, தமிழச்சி என பெண் கவிஞர்களை மேடையேற்றி வளர்த்தது திமுக. கனிமொழியும், தமிழச்சியும் மிக நெருக்கமாக இருந்து வந்தவர்கள். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கம். திமுக., ஆட்சியில், தமிழக வணிகவரித் துறை அமைச்சராக இருந்த தங்கப்பாண்டியனின் மகள் இவர். தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தமிழச்சியின் கணவர் சந்திரசேகர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

இப்படி திமுக., பாரம்பரியத்தில் வந்த தமிழச்சி, திமுக., மகளிரணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். ஒருபுறம் கனிமொழி திருப்பதி உண்டியலில் கண்வைத்தவராய் மேடையில் பேசுகிறார். ஆனால் வீட்டிலோ பூஜையறைக்கு குறைவில்லை! வெளிப்படையாக அவர் போல் தெய்வ நிந்தனைகளைச் செய்யாவிட்டாலும், தான் பகுத்தறிவுப் பாசறையில் இருந்தாலும், தன் குடும்பம் ஒரு ஹிந்துக் குடும்பம் என்பதைக் காட்டும் வகையில், தமிழச்சி தனது 60 ஆம் கல்யாண நிகழ்வை திருக்கடவூர் அபிராமி கோயிலில் கொண்டாடியது ஹிந்து உணர்வு கொண்ட பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

1 COMMENT

  1. எல்லா மே வேஷம் தான்.பொது வாழ்க்கை வேறு நிஜ வாழ்க்கை வேறு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories