ராஜபாளையம் அருகே புதிய மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்குமார் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது உதவி பொறியாளர் பால்பாண்டி வசமாக சிக்கினார். தளவாய்புரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்பு போலிசார் அவரை கைது செய்தனர்.

