February 21, 2026, 7:26 PM
29 C
Chennai

நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல் எப்படி தலைவனாக முடியும்?: எடப்பாடியாரின் கேள்வி!

IMG 20181110 203656 - 2026

நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல்ஹாசன் எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், சர்கார் படத்திற்கு அதிமுகவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மக்களும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கொச்சைப் படுத்தினால் தன்மானமுள்ள தொண்டர்கள் எதிர்ப்பார்கள். முருகதாஸின் உறவினர்கள் கூட இலவசங்களைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர். அந்த18 தொகுதிகள் மட்டுமல்ல… 234 தொகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும், அதிமுகவை உடைக்க எதிரிகளுடன் சதி செய்து கொண்டிருப்பவர் டிடிவி தினகரன் என்றும் குற்றம் சாட்டினார் முதல்வர்.

நாட்டை விட்டே ஓடிப் போகப் போவதாக தெரிவித்த கமல்ஹாசன், எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், நடிகர் கமல்ஹாசன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார், இப்போது அரசியலில் நடிக்கிறார் என்றார்.

மேலும், சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து தன்னை சந்தித்தபோது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டாரா என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

தமிழக உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories