ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

jallikattu bulls death - 2026

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின் தாத்த நாராயண கவுடு பல ஆண்டுகளாக பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்த்து மஞ்சு விரட்டு, எருது விடும் விழா உள்ளிட்ட போட்டிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்,

நாராயண கவுடுவின் பேரன் ரகு தற்போது 14 நாட்டு காளை மாடுகளை எருதுவிடும் விழாவிற்கு தயார்படுத்தி வருகிறார். இவை அலிகர் நாட்டு வகை காளை மாடு எனவும், இதில் மாகாராணி என்ற பட்ட பெயர் கொண்ட காளை பல ஊர்களில் பரிசுகளையும் பட்டங்களையும் பெற்று புகழ் பெற்ற காளை என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் காளை மாடுகளுக்கு தவிடு கலந்த தீவனத்தை ஐந்து காளைகளுக்கு வரிசையாக வழங்கியபோது இரண்டு காளை மாடுகள் நிலை தடுமாறி உள்ளன. எச்சரிக்கையடைந்த மாட்டு உரிமையாளர்கள் மீதமிருந்த மாடுகளுக்கு தீவனம் வைக்கவில்லை..

மாடுகள் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவர் ஒரு மணி நேரமாக அளித்த சிகிச்சை பலனளிக்காமல் மூன்று நாட்டு காளை மாடுகள் மாட்டு தொழுவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

ஒரு காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆசை ஆசையாக வளர்த்த மூன்று மஞ்சு விரட்டு மாடுகள் அடுத்தடுத்து உரிமையாளர்களின் கண் முன்பேயே உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது

மாட்டின் உரிமையாளர் ரகு, தமது மாடுகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் விஷம் கலந்திருந்ததால் மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்து, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

உயிரிழந்த 4 மாடுகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10 லட்சத்திற்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இறந்த மூன்று காளை மாடுகளையும் ஊர்ப் பொதுமக்கள் பூஜை செய்து வருகிறார்கள்,

மேலும் காளைகள் இறந்த செய்தி கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் இறந்த காளை மாடுகளைக் காண திரண்ட வண்ணம் உள்ளனர். நாட்டு மாடுகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையேயும், மாடு வளர்ப்போர் மத்தியிலேயும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories