ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

jallikattu bulls death - 2026

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின் தாத்த நாராயண கவுடு பல ஆண்டுகளாக பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்த்து மஞ்சு விரட்டு, எருது விடும் விழா உள்ளிட்ட போட்டிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்,

நாராயண கவுடுவின் பேரன் ரகு தற்போது 14 நாட்டு காளை மாடுகளை எருதுவிடும் விழாவிற்கு தயார்படுத்தி வருகிறார். இவை அலிகர் நாட்டு வகை காளை மாடு எனவும், இதில் மாகாராணி என்ற பட்ட பெயர் கொண்ட காளை பல ஊர்களில் பரிசுகளையும் பட்டங்களையும் பெற்று புகழ் பெற்ற காளை என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் காளை மாடுகளுக்கு தவிடு கலந்த தீவனத்தை ஐந்து காளைகளுக்கு வரிசையாக வழங்கியபோது இரண்டு காளை மாடுகள் நிலை தடுமாறி உள்ளன. எச்சரிக்கையடைந்த மாட்டு உரிமையாளர்கள் மீதமிருந்த மாடுகளுக்கு தீவனம் வைக்கவில்லை..

மாடுகள் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவர் ஒரு மணி நேரமாக அளித்த சிகிச்சை பலனளிக்காமல் மூன்று நாட்டு காளை மாடுகள் மாட்டு தொழுவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ஒரு காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆசை ஆசையாக வளர்த்த மூன்று மஞ்சு விரட்டு மாடுகள் அடுத்தடுத்து உரிமையாளர்களின் கண் முன்பேயே உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது

மாட்டின் உரிமையாளர் ரகு, தமது மாடுகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் விஷம் கலந்திருந்ததால் மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்து, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

உயிரிழந்த 4 மாடுகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10 லட்சத்திற்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இறந்த மூன்று காளை மாடுகளையும் ஊர்ப் பொதுமக்கள் பூஜை செய்து வருகிறார்கள்,

மேலும் காளைகள் இறந்த செய்தி கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் இறந்த காளை மாடுகளைக் காண திரண்ட வண்ணம் உள்ளனர். நாட்டு மாடுகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையேயும், மாடு வளர்ப்போர் மத்தியிலேயும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories