December 6, 2025, 7:00 PM
26.8 C
Chennai

ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

jallikattu bulls death - 2025

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின் தாத்த நாராயண கவுடு பல ஆண்டுகளாக பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்த்து மஞ்சு விரட்டு, எருது விடும் விழா உள்ளிட்ட போட்டிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்,

நாராயண கவுடுவின் பேரன் ரகு தற்போது 14 நாட்டு காளை மாடுகளை எருதுவிடும் விழாவிற்கு தயார்படுத்தி வருகிறார். இவை அலிகர் நாட்டு வகை காளை மாடு எனவும், இதில் மாகாராணி என்ற பட்ட பெயர் கொண்ட காளை பல ஊர்களில் பரிசுகளையும் பட்டங்களையும் பெற்று புகழ் பெற்ற காளை என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் காளை மாடுகளுக்கு தவிடு கலந்த தீவனத்தை ஐந்து காளைகளுக்கு வரிசையாக வழங்கியபோது இரண்டு காளை மாடுகள் நிலை தடுமாறி உள்ளன. எச்சரிக்கையடைந்த மாட்டு உரிமையாளர்கள் மீதமிருந்த மாடுகளுக்கு தீவனம் வைக்கவில்லை..

மாடுகள் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவர் ஒரு மணி நேரமாக அளித்த சிகிச்சை பலனளிக்காமல் மூன்று நாட்டு காளை மாடுகள் மாட்டு தொழுவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

ஒரு காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆசை ஆசையாக வளர்த்த மூன்று மஞ்சு விரட்டு மாடுகள் அடுத்தடுத்து உரிமையாளர்களின் கண் முன்பேயே உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது

மாட்டின் உரிமையாளர் ரகு, தமது மாடுகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் விஷம் கலந்திருந்ததால் மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்து, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

உயிரிழந்த 4 மாடுகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10 லட்சத்திற்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இறந்த மூன்று காளை மாடுகளையும் ஊர்ப் பொதுமக்கள் பூஜை செய்து வருகிறார்கள்,

மேலும் காளைகள் இறந்த செய்தி கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் இறந்த காளை மாடுகளைக் காண திரண்ட வண்ணம் உள்ளனர். நாட்டு மாடுகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையேயும், மாடு வளர்ப்போர் மத்தியிலேயும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories