அசிங்கப்பட்ட தேமுதிக.,! அசிங்கப்படுத்தும் திமுக.,!

duraimurugan mindvoice - 2026

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில், தேமுதிக., என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதிமுக., கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு போட்டியிட வேண்டிய தேவையில்லை என்று தேமுதிக., தொண்டர்கள் கருதுவதால், கூட்டணிப் பேச்சில் இருந்து பின்வாங்க விஜயகாந்த் முற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவேதான், பிரதமர்  மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது!

கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாநாட்டில் விஜயகாந்தும் இடம்பெறுவார் என்று கூறப் பட்ட நிலையில், அவரது படம் கூட்டணித் தலைவர்களின் படங்களுடன் வைக்கப் பட்டது. ஆனால், சற்று நேரத்தில் அது நீக்கப் பட்டது.

இந்நிலையில்,  அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது என்று  துரைமுருகன் கூறியுள்ளார்.

மேலும்,  எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன் என  துரைமுருகன் கூறியுள்ளார்.

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

தேமுதிக தொண்டர்கள் விருப்பம் என என்னிடம் கூட்டணி பேச அக்கட்சி முக்கியஸ்தர்கள் இளங்கோவன் உள்ளிட்ட சிலர் வந்தனர், சுதீஷூம் தொலைபேசியில் பேசினார். எங்களிடம் சீட் எதுவும் இல்லை என கூறிவிட்டேன் எனக் கூறி, திமுக. பொருளாளர் துரைமுருகன் தேமுதிக.,வை அசிங்கப் படுத்தியுள்ளார்.

மேலும், தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேடக்… அதற்கு துரைமுருகன் , தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தூங்குகிறாராம். தொந்தரவு செய்யும் அளவுக்கு அவசியமில்லை என விட்டுவிட்டேன் என்று பதில் கூறினார். இதை விட தேமுதிக.,வை அசிங்கப் படுத்தும் வேறு எதுவும் இல்லைதான்!

தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்று குழப்பம் நீடிக்கையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஒருபுறம், பாஜக, அதிமுகவினரோடு சுதீஷ் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினராம்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

முன்னதாக, விஜயகாந்த் வீட்டுக்குத் தேடிச் சென்று உடல் நலம் விசாரித்த திமுக., தலைவர் ஸ்டாலின், வெளியே செய்தியாளர்களிடம் பேசிய போது, நாங்கள் உடல் நலம் விசாரிக்கவே வந்தோம் என்றார். ஆனால்,பிரேமலதா பின்னர் கூறியபோது, அரசியல் பேசவே வந்தார்கள், கூடவே உடல் நலனும் விசாரித்தார்கள் என்றார். இது ஸ்டாலினை அசிங்கப் படுத்தியது. அதற்கு, இப்போது பதிலடி கொடுத்திருக்கிறது திமுக.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories