December 5, 2025, 9:06 PM
26.6 C
Chennai

அசிங்கப்பட்ட தேமுதிக.,! அசிங்கப்படுத்தும் திமுக.,!

duraimurugan mindvoice - 2025

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில், தேமுதிக., என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதிமுக., கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு போட்டியிட வேண்டிய தேவையில்லை என்று தேமுதிக., தொண்டர்கள் கருதுவதால், கூட்டணிப் பேச்சில் இருந்து பின்வாங்க விஜயகாந்த் முற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவேதான், பிரதமர்  மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது!

கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாநாட்டில் விஜயகாந்தும் இடம்பெறுவார் என்று கூறப் பட்ட நிலையில், அவரது படம் கூட்டணித் தலைவர்களின் படங்களுடன் வைக்கப் பட்டது. ஆனால், சற்று நேரத்தில் அது நீக்கப் பட்டது.

இந்நிலையில்,  அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது என்று  துரைமுருகன் கூறியுள்ளார்.

மேலும்,  எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன் என  துரைமுருகன் கூறியுள்ளார்.

தேமுதிக தொண்டர்கள் விருப்பம் என என்னிடம் கூட்டணி பேச அக்கட்சி முக்கியஸ்தர்கள் இளங்கோவன் உள்ளிட்ட சிலர் வந்தனர், சுதீஷூம் தொலைபேசியில் பேசினார். எங்களிடம் சீட் எதுவும் இல்லை என கூறிவிட்டேன் எனக் கூறி, திமுக. பொருளாளர் துரைமுருகன் தேமுதிக.,வை அசிங்கப் படுத்தியுள்ளார்.

மேலும், தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேடக்… அதற்கு துரைமுருகன் , தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தூங்குகிறாராம். தொந்தரவு செய்யும் அளவுக்கு அவசியமில்லை என விட்டுவிட்டேன் என்று பதில் கூறினார். இதை விட தேமுதிக.,வை அசிங்கப் படுத்தும் வேறு எதுவும் இல்லைதான்!

தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்று குழப்பம் நீடிக்கையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஒருபுறம், பாஜக, அதிமுகவினரோடு சுதீஷ் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினராம்.

முன்னதாக, விஜயகாந்த் வீட்டுக்குத் தேடிச் சென்று உடல் நலம் விசாரித்த திமுக., தலைவர் ஸ்டாலின், வெளியே செய்தியாளர்களிடம் பேசிய போது, நாங்கள் உடல் நலம் விசாரிக்கவே வந்தோம் என்றார். ஆனால்,பிரேமலதா பின்னர் கூறியபோது, அரசியல் பேசவே வந்தார்கள், கூடவே உடல் நலனும் விசாரித்தார்கள் என்றார். இது ஸ்டாலினை அசிங்கப் படுத்தியது. அதற்கு, இப்போது பதிலடி கொடுத்திருக்கிறது திமுக.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories