December 6, 2025, 6:48 AM
23.8 C
Chennai

மதுரை விழா… தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

Madurai car festival - 2025

மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி தொடங்கி,7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், இரண்டாம் கட்டமாக வரும் ஏப்.18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஏப். 18ஆம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. தேர்த் திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரா பௌர்ணமி விழாக்கள் நடைபெறுவதால், அன்று சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்பதால், தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து  நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுக்கப் பட்டது. இதற்காக மதுரை ஆட்சியரிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!

இதை அடுத்து, மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்வதாகவும், வேறு ஒன்றும் இதில் செய்வதற்கில்லை என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று வழக்குகள் தள்ளுபடி செய்வதாகவும், மதுரையில் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு செய்யப் படுவதை  தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறி, வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories