பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப் படுகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
இதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30க்கு வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். குறுஞ் செய்தியாக அனுப்பப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்