பெரம்பலூரில் பாலியல் புகார் பீதி கிளப்பிய நாம் தமிழர் கட்சியின் வக்கீல் கைது

Perambalur Collector office - 2026

பெரம்பலூரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்று எவர் பெயரையும் குறிப்பிடாமல் அனாமதேயமாக ஒருவர் மீது பாலியல் புகார் அளித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்!

பெரம்பலூரில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அரசுப் பணி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்கள் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது குறித்த செய்திகள் வலைத்தளங்களில் வைரலாயின.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் அருள் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார். ஆனால், பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆளும் கட்சி பிரமுகர் என்று குறிப்பிட்டிருந்தாரே தவிர, அந்த நபர் யார் என்று கூறவில்லை.

மேலும், அந்தப் பிரமுகர் பெயரை தெரிவிக்க மறுத்த அருள், பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் பதிவு என்று இரு ஆடியோக்களையும் வெளியிட்டார்.

மேலும், இது குறித்து ஊடகங்களில் தெரிவிப்பதற்காக, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றும் நடத்தப் பட்டது. அதிலும், பெண்களை சீரழித்தவர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்த அருள், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வைத்தால் அவர்களின் பெயர்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் அதிமுக.,வினர் கடும் கோபம் கொண்டனர். வேண்டுமென்றே தங்கள் கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வழக்கறிஞர் அருள் அவதூறு பரப்புகிறார் என்று போலீஸில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த போலீஸார், வழக்கறிஞர் அருளை கைது செய்தனர்.

மேலும், பெரம்பலூர் விவகாரம் குறித்து விசா00ரித்து வருவதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிப்பதாகவும் பெரம்பலூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories