சன்டே ஸ்பெஷல்.. மாமல்லபுரத்தில் மது விருந்து: விசாரணைக்குப் பின் இளைஞர்கள் விடுவிப்பு!

mamallapuram drug youth - 2026

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் போதைப் பொருள் மற்றும் மது விருந்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 160 பேர்  விசாரணைக்கு பின்பு விடுவிக்கப் பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தனியார் விடுதியில் நள்ளிரவில் மதுவிருந்தில் கலந்து கொண்ட 160 இளைஞர்களில் சில இளைஞர்களின் பெற்றோர்க்கு உடனே தகவல் தரப்பட்டதும், அவர்கள் நேரடியாக வந்து ஆதாரங்களை கொடுத்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள ஓடர் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையிலான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஓடர் ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

சோதனையில் ரிசார்ட்டில் மது மற்றும் போதைப் பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், இதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்தும், ரிசார்ட்டுக்கு நேரில் வந்தும் பதிவு செய்ததும் தெரியவந்தது.

இவ்வாறு மது விருந்தில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 153 பேரை போலீசார் அழைத்து வந்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணைக்குப் பின்னர், அவரவரின் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக ரிசார்ட்டில் அழைத்து வரப் பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி மாமல்லபுரத்தில் உள்ள சௌமியா மஹாலில் அடைத்து வைத்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும், கைப் பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் கைப் பற்றியிருந்தனர்.

இவ்வாறு மது விருந்தில் கலந்து கொண்டு பிடிபட்டவர்களில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இருந்ததால், அனைவரையும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

​இதனிடையே, மாமல்லபுரத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின்பேரில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் சொகுசு விடுதிக்கு சீல் வைத்தார். மேலும் சொகுசு விடுதியின் ஊழியர்கள் 12 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories