December 6, 2025, 3:21 AM
24.9 C
Chennai

லிப்ட் தர மறுத்தவருக்கு கத்தி குத்து குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு…

murder - 2025

வேலுார் மாவட்டத்தில் லிப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அடுத்துள்ள கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்தவா் தட்சிணாமூர்த்தி இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் அளவுக்கதிகமான போதையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வினோத், பார்த்திபன் ஆகியோர் தட்சிணாமூா்த்தியிடம் லிப்ட் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் தட்சிணாமூர்த்தி லிப்ட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வினோத், பார்த்திபன் இருவரும் அவரிடம் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தியும், காதை அறுத்தும், ஆத்திரம் அடங்காமல் அவரது தலைமீது கல்லை துாக்கி போட்டு தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை அக்கம் பக்கம் உள்ளவா்கள் மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த கிராம மக்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உறவினா்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்ய வலியுறித்தி அன்வா்த்திகான்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவா்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக பேலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories