17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி…!

santheb nathuri - 2026

17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியனின் மறுவாழ்வுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி ரூ.1½ லட்சம் செலவில் கடை அமைத்து கொடுத்தார். பொதுமக்கள் பாராட்டு….!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மேல வெள்ளமடத்தை சேர்ந்தவர் வேதமணி (வயது 57). இவர் ஒரு குற்ற வழக்கில் கைதாகி 17 ஆண்டுகள் பாளையங் கோட்டை சிறையில் இருந்தார்.

பின்னர் அவர் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு இறுதியில் விடுதலை ஆனார்.

பின்னர் சில வாரங்கள் கழித்து மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் அமைக்க ரூ.1 லட்சம் கடன் கேட்டு மனு அளித்தார்.

மனுவை பரிசீலித்த அதிகாரிகள் அவரை பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தினர்.

இதனையடுத்து சில வாரம் கழித்து அவர் மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதனையடுத்து அவரது மனுவை பரிசீலித்தபோது கடந்த காலத்தை காரணம் காட்டி கடன்தர வங்கிகள் மறுத்தது தெரியவந்தது.

இதை அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வேதமணி குறித்து விசாரிக்க உதவி கலெக்டருக்கு உத்தர விட்டார்.

உதவி கலெக்டர் விசாரணையில் வேதமணி சிறை செல்லும் முன்பு எலக்ட்ரீசியனாக பணியாற்றி யது தெரியவந்தது.

இதையடுத்து வேதமணியின் மறுவாழ்வுக்கு தேவையான உதவி செய்ய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, அவருக்கு மாவட்ட கலெக்டரின் சுய விருப்புரிமை நிதியின் கீழ் சுமார் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் செலவில் எலக்ட்ரிக்கல் கடை அமைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

அந்த பொருட்களை கொண்டு வேதமணி மேல வெள்ளமடம் சின்னமாடன் குடியிருப்பு ரோட்டில் கருப்பசாமி கோவில் அருகே எலக்ட்ரிக்கல் கடையை அமைத்தார்.

அந்த கடையை கடந்த 16-ந்தேதி முதல் திறந்து வியாபாரம் செய்து வருகிறார்.

அங்கு வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கியும் கொடுத்து வருகிறார்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

அங்கு பொருட்கள் வைக்க தேவையான மேஜை மற்றும் அலமாரிகள் அனைத்தும் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வேதமணியின் கடைக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வேதமணி அந்த பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

அவருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கவும் மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவா் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகிறன்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories