சென்னை: தமிழகத்தில் 45 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர்சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது… தமிழகத்தில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் இது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2.4 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது மொத்த அளவில் 45 சதவீதம் ஆகும். வரும் மே மாதம் 31-ம் தேதி வரை வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விவரங்கள் சேகரிப்பர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் இத்திட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. வாக்காளரிடமிருந்து பெறப்படும் செல்போன், இமெயில் போன்றவை ரகசியமாக வைக்கப்படும். தேர்தல் ஆணையத்துக்கும் வாக்காளர்களுக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மட்டுமே இந்த விவரங்கள் பயன்படுத்தப்படும்… என்று கூறினார்.
தமிழகத்தில் 45% வாக்காளர் ஆதார் விவரங்கள் சேர்ப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari