மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான ரூ.200 கோடி சொத்தில் முறைகேடு: ஆட்சியருக்கு அறநிலையத்துறை கடிதம்….!

MADURI MEENACHI - 2026மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.200 கோடிமதிப்புள்ள சொத்தை அதிகாரிகள் துணையோடு பட்டா மாறுதல் செய்து தனிநபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து அறநிலையத் துறை புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலங்களில் மிகச்சிறந்த ஆலையமாக கருத்தப்பட்டு வருவது மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்.

இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசையும்,  அசையா சொத்துகள் உள்ளன. இதில், மதுரை பொன்மேனியில் உள்ள 14 ஏக்கர் நிலமும் அடங்கும். இந்த நிலம் தற்போது ரூ.200 கோடி மதிப்புடையதாகும். .

இந்த நிலத்தில் 4 ஏக்கரில் மட்டும் மீனாட்சியம்மன் கோயிலின் மேற்பார்வையில் குத்தகைதாரர்கள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது இந்த நிலத்தை தனி நபர்கள், வருவாய் அதிகாரிகள் துணையோடு முறைகேடாக பட்டா மாறுதல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பட்டா மாறுதலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு இந்து அறநிலையத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”பட்டா மாறுதல் செய்யப்பட்ட இந்த நிலத்துக்கான அனைத்து அசல் ஆவணங்களும் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திடம் உள்ளன.

ஏற்கெனவே இந்தச் சொத்தை 6 மாதத்துக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்து அதைக் கண்டுபிடித்துவிட்டார்.

அதனால், இந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்வது ஏற்புடையது அல்ல, சட்ட விரோதமானது என்று கண்டித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவையும் மீறி வருவாய்த் துறை அதிகாரிகள் மோசடியாக தற்போது பட்டா மாறுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் தரப்பில் இருந்து ஆட்சியருக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

துணைபோகும் அதிகாரிகள் நிலம் மற்றும் இடங்களுக்கு பட்டா மாறுதல் கோரி அதன் உரிமையாளர்கள் பலர், உண்மையான ஆவணங்களைக் கொண்டு தாலுகா அலுவலகங்களை நாடினால் அதற்கு தேவையற்ற சாக்கு போக்குகளைக் கூறி பட்டா மாறுதல் செய்யாமல் தட்டிக்கழிக்கும் நிலைதான் இன்று நிலவுகிறது.

அதேநேரத்தில் போலியான ஆவணங்களைத் தயார் செய்வதற்கும், அதன் மூலம் பட்டா மாறுதல் செய்வதற்கும் சிலர் புரோக்கர்களை நாடும்போது எளிதாக பட்டா மாறுதல் நடந்துவிடுகிறது. இதற்குக் காரணம், புரோக்கர்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கைகோத்துக் கொண்டு முறைகேட்டுக்கு துணை புரிகின்றனர்.

பட்டா மாறுதல் முறைகேடு தொடர்பாக காவல்நிலையங்களிலும், மாவட்ட வருவாய் அலுவலர் நடத்தும் நீதிமன்றங்களிலும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வருவாய்த் துறையில் நிலவும் லஞ்ச ஊழலை ஒழித்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories