சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் யோகா செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரம் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட் டுள்ளது என்று கூறினார்.
மேலும் அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்