December 6, 2025, 3:25 AM
24.9 C
Chennai

முகிலனை நாய் கடித்ததில், ஊசி போடப் பட்டுள்ளது: சிபிசிஐடி போலீஸார் தகவல்!

mukilan tirupathi - 2025
தமிழக போலீசாரின் கண்களில் இருந்து தலைமறைவாக இருந்து, திருப்பதியில் பிடிபட்டுள்ள முகிலனை, கடந்த வாரம் நாய் கடித்துள்ளதாகவும், அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது என்றும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் காணாமல் போனார். இதை அடுத்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி பூங்கொடி சார்பில், ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தலைமறைவான நாளில் இருந்து சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் நேற்று முகிலனை ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் தமிழில் கூடங்குளம் தொடர்பான முழக்கங்களை இடவே, அவர் குறித்த விசாரணையில், அவர் முகிலன் என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவே தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ‌மனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அதிகாலை 1.30க்கு முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை கொண்டு வந்தனர். தற்போது எழும்பூரில் முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்த போது அவரை நாய் கடித்ததற்கான காயம் இருந்ததாகவும், தன்னை ஒரு வாரத்திற்கு முன் நாய் கடித்ததாக முகிலன் மருத்துவர்களிடம் கூறியதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு ஏற்பட்ட நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளது என்றும், சரியான வகையில் உணவு உண்ணாததால், முகிலன் மிகவும் சோர்வாகவும் உடல் பலவீனத்துடனும் இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். முகிலன், தாடி வளர்த்துக் கொண்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், அவரை நாய் கடித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories