முகிலனை நாய் கடித்ததில், ஊசி போடப் பட்டுள்ளது: சிபிசிஐடி போலீஸார் தகவல்!

mukilan tirupathi - 2026
தமிழக போலீசாரின் கண்களில் இருந்து தலைமறைவாக இருந்து, திருப்பதியில் பிடிபட்டுள்ள முகிலனை, கடந்த வாரம் நாய் கடித்துள்ளதாகவும், அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது என்றும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் காணாமல் போனார். இதை அடுத்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி பூங்கொடி சார்பில், ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தலைமறைவான நாளில் இருந்து சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் நேற்று முகிலனை ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் தமிழில் கூடங்குளம் தொடர்பான முழக்கங்களை இடவே, அவர் குறித்த விசாரணையில், அவர் முகிலன் என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவே தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ‌மனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அதிகாலை 1.30க்கு முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை கொண்டு வந்தனர். தற்போது எழும்பூரில் முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்த போது அவரை நாய் கடித்ததற்கான காயம் இருந்ததாகவும், தன்னை ஒரு வாரத்திற்கு முன் நாய் கடித்ததாக முகிலன் மருத்துவர்களிடம் கூறியதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அவருக்கு ஏற்பட்ட நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளது என்றும், சரியான வகையில் உணவு உண்ணாததால், முகிலன் மிகவும் சோர்வாகவும் உடல் பலவீனத்துடனும் இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். முகிலன், தாடி வளர்த்துக் கொண்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், அவரை நாய் கடித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories