சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து எந்த தயக்கமோ குழப்பமோ இருந்ததில்லை: அமித் ஷா!

amitsha speech - 2026நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்; பிரிவினைகளை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, நூலை வெளியிட்டுப் பேசினார்.

venkaiah naidu bookrelease - 2026இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, நாட்டின் வளர்ச்சிக்கு உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம்; அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் கிடைக்க வேண்டும்! வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அந்தந்த மாநில மொழிகளில் வழக்கறிஞர்கள் வாதாட நடவடிக்கை வேண்டும் என்றார்.

முன்னதாக இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் குறித்தும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.

amitsha venkaiahnaidu - 2026அப்போது பேசிய அவர், வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன் என்று  கூறினார். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் வெங்கய்ய நாயுடு என்றார்.

இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அமித் ஷா.

அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை; மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன்  என்று கூறிய அமித்ஷா, இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்; பணிகள் காரணமாக தமிழ் கற்க முடியவில்லை! ஆனால் நிச்சயமாக சென்னையில் தமிழில் பேசுவேன் என்றார் அவர்.

amitsha speech rajaji - 2026ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்து தமக்கு துளியும் குழப்பம் ஏற்படவில்லை என்றும் இனி அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறந்த அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் குறித்து பேசிய அமித் ஷா, தாம் எம்.எல்.ஏ.வாக இருந்த போதே அதை நீக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறினார். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது பற்றியோ, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியோ தனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை என்றார்.

அரசமைப்பின் 370ஆவது பிரிவால் நாட்டிற்கும், காஷ்மீருக்கும் பயனில்லை! இனி அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும்! வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்றார் உறுதியாக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories