சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து எந்த தயக்கமோ குழப்பமோ இருந்ததில்லை: அமித் ஷா!

amitsha speech - 2026நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்; பிரிவினைகளை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, நூலை வெளியிட்டுப் பேசினார்.

venkaiah naidu bookrelease - 2026இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, நாட்டின் வளர்ச்சிக்கு உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம்; அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் கிடைக்க வேண்டும்! வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அந்தந்த மாநில மொழிகளில் வழக்கறிஞர்கள் வாதாட நடவடிக்கை வேண்டும் என்றார்.

முன்னதாக இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் குறித்தும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.

amitsha venkaiahnaidu - 2026அப்போது பேசிய அவர், வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன் என்று  கூறினார். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் வெங்கய்ய நாயுடு என்றார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அமித் ஷா.

அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை; மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன்  என்று கூறிய அமித்ஷா, இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்; பணிகள் காரணமாக தமிழ் கற்க முடியவில்லை! ஆனால் நிச்சயமாக சென்னையில் தமிழில் பேசுவேன் என்றார் அவர்.

amitsha speech rajaji - 2026ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்து தமக்கு துளியும் குழப்பம் ஏற்படவில்லை என்றும் இனி அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறந்த அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் குறித்து பேசிய அமித் ஷா, தாம் எம்.எல்.ஏ.வாக இருந்த போதே அதை நீக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறினார். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது பற்றியோ, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியோ தனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை என்றார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அரசமைப்பின் 370ஆவது பிரிவால் நாட்டிற்கும், காஷ்மீருக்கும் பயனில்லை! இனி அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும்! வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்றார் உறுதியாக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories