சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து எந்த தயக்கமோ குழப்பமோ இருந்ததில்லை: அமித் ஷா!

amitsha speech - 2026நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்; பிரிவினைகளை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, நூலை வெளியிட்டுப் பேசினார்.

venkaiah naidu bookrelease - 2026இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, நாட்டின் வளர்ச்சிக்கு உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம்; அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் கிடைக்க வேண்டும்! வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அந்தந்த மாநில மொழிகளில் வழக்கறிஞர்கள் வாதாட நடவடிக்கை வேண்டும் என்றார்.

முன்னதாக இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் குறித்தும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.

amitsha venkaiahnaidu - 2026அப்போது பேசிய அவர், வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன் என்று  கூறினார். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் வெங்கய்ய நாயுடு என்றார்.

இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அமித் ஷா.

அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை; மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன்  என்று கூறிய அமித்ஷா, இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்; பணிகள் காரணமாக தமிழ் கற்க முடியவில்லை! ஆனால் நிச்சயமாக சென்னையில் தமிழில் பேசுவேன் என்றார் அவர்.

amitsha speech rajaji - 2026ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்து தமக்கு துளியும் குழப்பம் ஏற்படவில்லை என்றும் இனி அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறந்த அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் குறித்து பேசிய அமித் ஷா, தாம் எம்.எல்.ஏ.வாக இருந்த போதே அதை நீக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறினார். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது பற்றியோ, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியோ தனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை என்றார்.

அரசமைப்பின் 370ஆவது பிரிவால் நாட்டிற்கும், காஷ்மீருக்கும் பயனில்லை! இனி அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும்! வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்றார் உறுதியாக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories