அராஜகம்! பழங்களை கொட்டி… வண்டிகளை தள்ளிவிட்டு… சாலையோர வியாபாரிகளை துவம்சம் செய்த வாணியம்பாடி ஆணையர்!

vaniampadi commissioner - 2026

ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை.. இடம்: வாணியம்பாடி ; நபர்: நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் – என்ற தகவல்களுடன் வீடியோ ஒன்று டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவில், சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் பழக்கடைக் காரர்களின் வண்டிகளைத் தள்ளிவிட்டு, சாலையில் தள்ளுவண்டியில் பழம் விற்பவர்களின் பழங்களை எடுத்து ஒவ்வொன்றாக வெளியில் தூக்கிப் போட்டு, சிலரது வண்டிகளைக் கவிழ்த்துவிட்டுச் செல்கிறார்.

இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூகத் தளங்களிலும் விமர்சனங்கள் பலமாக எழுந்து வருகின்றன. உணவுப் பண்டத்தை இப்படி சீரழிப்பவருக்கு இறைவன் பலமான தண்டனை கொடுப்பான் என்றும், நகராட்சி ஆணையரிடம் பெரிய அளவில் நஷ்ட ஈடு பெற்றுத் தர வழக்கறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்து வருகின்றன.

ஊரடங்கு நேரத்தில் கடை திறந்து வியாபாரம் செய்தார்கள் என்று கூறி…

நடைபாதையில் பழம் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளின் வண்டிகளை தள்ளிவிட்டு… பழங்களை எடுத்து சாலையில் கவிழ்த்துவிட்டு…
கடைகளுக்குள் புகுந்து அனைத்தையும் எடுத்து சாலையில் கொட்டி…
இதை எல்லாம் நாம் சினிமாக்களில் ரவுடிகளின் மிரட்டல் சீன்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்…
இந்த இடம்… வாணியம்பாடி
சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அந்த அதிகாரி… நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் #CECILTHOMAS – என்று விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த வாணியம்பாடி நகராட்சி ஆணியர் சிசில் தாமஸ், கோயம்பேடு சந்தை மூலம் பலருக்கு கொரோனா பரவியது. அதுபோல் வாணியம்பாடி நகரிலும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக மக்களைக் காப்பாற்றவே அவ்வாறு செய்யும் படி ஆகிவிட்டது. காலை எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இருப்பினும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories