April 27, 2025, 3:00 AM
29.6 C
Chennai

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் விநியோகம்!

chennai press club
chennai press club

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வழங்கப்படுகின்றன.

நாள் 08-06-2020 (திங்கட்கிழமை)நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் , சென்னை 600002.

கொரோனோ நோய்த்தொற்றைத் தடுக்கும் பணியில் மருத்துவத் துறையினர், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் முனைப்பாக முன்களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நமது ஊடகத்துறையினர்.

மக்கள் சேவையில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஊடகத்துறையினரில் இன்றுவரை 100க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 70க்கும் மேற்பட்ட நண்பர்கள் குணமடைந்துள்ளனர். மற்ற நண்பர்களும் நலமுடன் உள்ளனர்.

ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முன்களப் பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகை ஊடகத்துறையினர் நலனுக்காக *தமிழக அரசின் ஆதரவுடன் மல்ட்டி விட்டமின் மற்றும் ஜிங்க் சல்பேட் மாத்திரைகளையும் , ஹோமியோபதி மருத்துவர் திரு.நிர்மல்குமார் அவர்களின் ஆதரவில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையானஆர்சனிக் ஆல்பம் 30 மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை 08-06-2020 அன்று வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

ALSO READ:  அழகர்கோவில் அருகே மகா பெரியவா கோவில் பூமி பூஜை!

தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நடத்தத் திட்டமிட்டுள்ள இந்த நிகழ்வில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையரும் பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு அதிகாரியுமான மதிப்புமிகு திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்கள் பங்கேற்கிறார்.

களத்தில் கடுமையான பணிச்சூழலில் பணியாற்றி வரும் ஊடகத்துறை நண்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

காலத்தின் தேவையைக் கருதி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது .

08-06-2020 திங்கட்கிழமை பிற்பகல் முதல் களப்பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகை – ஊடக நண்பர்கள் நமது மன்றத்தில் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • பாரதிதமிழன்,
    இணைச் செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories