December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் விநியோகம்!

chennai press club
chennai press club

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வழங்கப்படுகின்றன.

நாள் 08-06-2020 (திங்கட்கிழமை)நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் , சென்னை 600002.

கொரோனோ நோய்த்தொற்றைத் தடுக்கும் பணியில் மருத்துவத் துறையினர், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் முனைப்பாக முன்களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நமது ஊடகத்துறையினர்.

மக்கள் சேவையில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஊடகத்துறையினரில் இன்றுவரை 100க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 70க்கும் மேற்பட்ட நண்பர்கள் குணமடைந்துள்ளனர். மற்ற நண்பர்களும் நலமுடன் உள்ளனர்.

ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முன்களப் பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகை ஊடகத்துறையினர் நலனுக்காக *தமிழக அரசின் ஆதரவுடன் மல்ட்டி விட்டமின் மற்றும் ஜிங்க் சல்பேட் மாத்திரைகளையும் , ஹோமியோபதி மருத்துவர் திரு.நிர்மல்குமார் அவர்களின் ஆதரவில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையானஆர்சனிக் ஆல்பம் 30 மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை 08-06-2020 அன்று வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நடத்தத் திட்டமிட்டுள்ள இந்த நிகழ்வில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையரும் பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு அதிகாரியுமான மதிப்புமிகு திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்கள் பங்கேற்கிறார்.

களத்தில் கடுமையான பணிச்சூழலில் பணியாற்றி வரும் ஊடகத்துறை நண்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

காலத்தின் தேவையைக் கருதி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது .

08-06-2020 திங்கட்கிழமை பிற்பகல் முதல் களப்பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகை – ஊடக நண்பர்கள் நமது மன்றத்தில் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • பாரதிதமிழன்,
    இணைச் செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories