December 6, 2025, 6:05 PM
26.8 C
Chennai

ஊரடங்கு தளர்வுகளால் அதிகரித்த கொரோனா பரவல்: மருத்துவர் குழு தகவல்!

coronavirus
coronavirus

அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளால் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் குழு  கூறியுள்ளது. 

இன்று முதல் அமைச்சருடனான கூட்டத்துக்குப் பிறகு  கொரோனா தொற்று நோய் பரவல் குறித்து தகவல் தெரிவித்த மருத்துவ குழுவினர், சுவாசப் பிரச்சனை வந்த உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்! என்று வலியுறுத்தினர் 

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது மருத்துவ குழு வெளியிட்ட தகவல்கள்  …

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம்; அதுபோல் நடக்க உள்ளது. சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஓரிரு நாள் காய்ச்சல் அறிகுறி இருந்தால்கூட மருத்துவமனைக்கு வரவேண்டும். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா குறித்த பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன.  அதனால் தான் தொற்றும் அதிகம் இருப்பதாக தெரிகிறது. 

சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. எனினும் அரசு அறிவித்த தளர்வுகளால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. எனவே ஊரடங்கு கடுமையாக்கப் பட வேண்டும் என்று  மருத்துவர் குழு தகவல் தெரிவித்தது. 

முன்னதாக,  நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை முன்னிட்டு, அதனைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய,  மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரைகளை வழங்கியது.  இதில், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, சிகிச்சை முறை உள்ளிட்ட பரிந்துரைகள் ஆய்வு செய்யப் பட்டன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories