சாம் மானேக் ஷா – நூல் வெளியீடு!

manak-sha-book-release
manak-sha-book-release

சாம் மானேக் ஷா – குறித்த ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு, இணையதளம் வழியாக சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் பி.டி.ஆஷா, நீதியசர் திரு. ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர். ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் ஜெனரல் ஆர்.கார்த்திகேயன், கேப்டன் டி.பி. இராமச்சந்திரன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

“சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். விஜயராகவன் ‘சாம் மானெக் ஷா’ குறித்து, முழுமையான தகவல்களை உள்ளடக்கிய நூலை எழுதியுள்ளார். இந்த நூலை ஒவ்வோர் இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டும். நமது தேசத்தின் ஒப்பற்ற ராணுவ வீரர்களுடைய தியாக வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேசத்தின் மீது மதிப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற ராணுவ வீரர்களைப் பற்றிய நூல்கள் அவசியம் தேவைப்படுகின்றன” என்று நீதியரசர் ஜி. ஆர்.சுவாமிநாதன் தமது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

sam-manak-shaw-book
sam-manak-shaw-book

“புல்வாமா தாக்குதல் நடைபெற்ற தினத்தை நாம் மறக்கக் கூடாது. தேசத்திற்கு வரும் அச்சுறுத்தல்களை சரியான வகையில் பதிலடி கொடுத்து தடுக்க வேண்டும். சென்னை வார் மெமோரியலில், ஓர் இளம் ராணுவ வீரர் தனது மகனை அழைத்து வந்து தேசத்திற்காக இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களைப் பற்றிய தகவல்களை தன் மகனுக்கு விளக்கிச் சொன்னார். இந்த நிகழ்வைப் பார்த்த நான் உள்ளபடியே நெகிழ்ந்து போனேன். தென் நாட்டில் ராணுவ வீரர்களின் பங்களிப்புகளைப் பற்றி நமக்கு சரியானபடி சொல்லப்படவில்லை. இந்த நிலை மாறவேண்டும். அதற்கு நமது ராணுவ வீரர்களின் வாழ்க்கை சித்திரங்களை அவசியம் படிக்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும். சாம் மேனேக் ஷா பற்றிய நூலை எழுதி இருக்கும் வழக்கறிஞர் விஜயராகவன் ஆய்வு மனப்பான்மையுடன் இந்த நூலை எழுதியுள்ளார்” என புகழாரம் சூட்டினார் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் (பொது) ஆர். சங்கரநாராயணன்.

நிகழ்ச்சியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், வழக்கறிஞர் சுமதி, கேப்டன் வின்சென்ட் தாமஸ், ராமசாமி மெய்யப்பன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நூலாசிரியர் விஜயராகவன் ஏற்புரை வழங்கியதுடன், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூலைத் தமிழிலும் கொண்டு வரப் போவதாகக் கூறினார்.

எஸ். பவுண்டேஷனுடன் இணைந்து சென்னை பவுண்டேஷன் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories