December 6, 2025, 1:04 AM
26 C
Chennai

‘கலைமகள்’ தீபாவளி மலர் 2021 வெளியீடு!

kalaimagal malar release
kalaimagal malar release

பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மாத இதழான கலைமகள் இதழின் தீபாவளி மலர் 2021ன் வெளியீட்டு நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அனைத்து இதழ் விற்பனைக் கடைகளுக்கும் அனுப்பப் பட்டு வருகிறது.

கலைமகள் தீபாவளி மலரை கலைமகள் பதிப்பாளர் பிடிடி ராஜன் வெளியிட, பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மேதகு ஆர் வெங்கட்ராமன், மேதகு சங்கர் தயாள் சர்மா, மேதகு கே ஆர் நாராயணன் மற்றும் மேதகு டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருக்கு தனிச் செயலராக இருந்தவரும், தற்போது மஞ்சரி இதழின் ஆசிரியராக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் பேராசிரியர் ரகுநாதன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொண்டார்.

மலர் குறித்து கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் குறிப்பிட்ட போது, கலைமகள் தனது 90வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த மலர் வெளியாகியிருப்பது சிறப்பு!

தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே கலைமகள் தீபாவளி மலரில் எழுதிய கதை கட்டுரைகள் கவிதைகள் இவ்வாண்டு தீபாவளி மலரை அலங்கரிக்கின்றன. இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும்போது மனதிற்குள் ஓர் உத்வேகம் பிறக்கும் என்பது திண்ணம். இந்த தீபாவளி மலரை காலக்கண்ணாடி என்று சொல்லலாம்.

காளிதாசன் என்ற பெயரில் மகாகவி எழுதிய கட்டுரையும் ஆடிட்டர் சிவக்குமார் எழுதியுள்ள தலைசிறந்த பெண் ஆடிட்டர்களைப் பற்றிய கட்டுரையும் மலருக்கு அழகு சேர்க்கிறது. 90 ஆண்டுகால கலைமகள் வரலாற்றை கலைமகளின் இலக்கியப் பயணத்தை தனது பேட்டியின் மூலம் பதிவு செய்திருக்கிறார் கலைமகளின் பதிப்பாளர் ராஜன்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வாசகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ளது கலைமகள் தீபாவளி மலர். அலுவலகத்தில் மலர் கைவசம் இல்லை. ஆதரவு தெரிவித்த அத்தனை வாசக அன்பர்களுக்கும் மிக்க நன்றி… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories