June 16, 2025, 1:09 PM
32 C
Chennai

சென்னையில்…கொட்டித் தீர்க்கும் கனமழை! சுரங்கப் பாதைகள் மூடல்!

rain in chennai
rain in chennai

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகரில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் புகுந்து மூடியதால் நகரில் உள்ள 11 க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது!

சென்னை மாநகர் முழுவதும் பரவலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்ததை அடுத்து, நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தாம்பரம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

தி.நகர் முதல் அசோக் பில்லர் வரை பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. சென்னை துரைசாமி பாலம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னையில் விடிய விடிய தொடரும் கனமழையால் நகரில் பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை நிலவரம்:

அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவானது.

தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது

சென்னையில் 11 சுரங்கபாதைகள் முடப்பட்டுள்ளன. துரைசாமி, மேட்லி, வியாசர்பாடி, கணேசபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்டவை மழை நீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories