90 சதம் போலீஸார் ஊழல்வாதிகள்; திறமையற்றவர்கள்: நீதிமன்றம் வேதனை!

madras high court - 2026

காவல் துறையில் 90 சதவீதம் பேர் ஊழல் அதிகாரிகளாக, திறமையில்லாதவர்களாக இருக்கின்றனர் என்று, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஊழல் இல்லாத அதே சமயம் திறமையற்ற நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர் மீதான வழக்கு குறித்த விசாரணையின் போதுதான் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

வசந்திக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு பின் வழக்கை முடித்து வைத்துள்ளனர். இதை அடுத்து உயர் நீதிமன்றத்தில் வசந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், புதிதாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

04 Aug29 Madras High Court - 2026
04 Aug29 Madras High Court

அதன் பின் மீண்டும் வழக்கு விசாரித்ததாகக் குறிப்பிடப்பட்டு, முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வசந்தி, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமிக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இல்லை என்று குறிப்பிட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், தமது உத்தரவில் குறிப்பிட்டதாவது…

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக புலன் விசாரணை நடந்துள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் அங்கேயே எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்து, சட்டப்படி தொடரலாம்.

புலனாய்வு அதிகாரியின் திறமை திருப்தியாக இல்லை என்றாலும் அவரது திறமைக்குத் தக்கவாறு அவர் விசாரணை செய்துள்ளார். அவரது திறமையின்மையை வைத்து, அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று கருத முடியாது.

புகார் கொடுக்கப்பட்ட நேரத்தில் விற்பனையாளர் உயிருடன் இருந்தார். அவரை உடனடியாக விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். ஆனால் அவர் இறக்கும் வரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை.

துரதிருஷ்டவசமாக காவல் துறையில் 90 சதவீதம் பேர் ஊழல் அதிகாரிகளாகவும் போதிய திறமை இல்லாதவர்களாகவும் உள்ளனர். 10 சதவீதம் பேர் நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளனர். 10 சதவீதம் பேர் எல்லா விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. எனவே அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஊழல் அதிகாரிகளை களையவும், ஊழலற்ற திறமையில்லாத அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் இது சரியான நேரம்… என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories