சென்னை: நோக்கியா தொழிற்சாலை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொன்னுபாண்டி பேசும்போது, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் தங்கமணி பேசியபோது, நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் தொடங்கச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்தத் தொழிற்சாலை வேறு எங்கும் சென்றுவிடவில்லை. இந்தியாவில் வேறு எங்கும் தொடங்கும் எண்ணமும் அந்த நிறுவனத்துக்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் முன் தேதியிட்டு வரிகள் விதித்ததன் காரணமாகவே, அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. எனவே, அது தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம் என்றார்.
Popular Categories