December 5, 2025, 11:36 AM
26.3 C
Chennai

தொழிலதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்டு கைதான பெண் மருத்துவருக்கு சிகிச்சை..

857597 - 2025

சென்னை தொழிலதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்ட பெண் மருத்துவரை கைதுசெய்த போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சரவணன். தொழில் அதிபர். இவரை கடந்த 20-ந் தேதி மர்ம கும்பல் காரில் கடத்தியது. இதைதொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரத்திலேயே சரவணன் மீட்கப்பட்டார்.

விசாரணையில் தொழில் அதிபர் சரவணன் ரூ.1 கோடி பணத்தகராறில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ், கோவை சிறைக்காவலர் நாகேந்திரன், கரூர் அரவிந்த்குரு, திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அப்ரோஸ், மதுரையை சேர்ந்த அஜய், விஜயபாண்டி என்பது தெரிந்தது.

அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து பொம்மை துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரிந்தது.

இந்த நிலையில் சரவணன் கடத்தலுக்கு காரணம் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வரும் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பது தெரிய வந்தது. சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது. அவர்களுக்கு இடையே பணப்பிரச்சினை இருப்பதை அறிந்து சரவணன் கடத்தலுக்கு டாக்டர் அமிர்தா திட்டம் வகுத்து கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து டாக்டர் அமிர்தாவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நள்ளிரவு சிறையில் இருந்த டாக்டர் அமிர்தாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நள்ளிரவு 1 மணி அளவில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அமிர்தாவின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories