December 8, 2025, 2:13 AM
23.5 C
Chennai

காஞ்சி ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி..

903809 1 1 - 2025

காஞ்சிபுரம் ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆனது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியது.

சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் தொடர்ந்து மற்ற சிலிண்டர்களும் வெடிக்க தொடங்கியது. இதையடுத்து குடோன் ஊழியர்கள் அலறியடுத்து பலத்த தீ காயங்களுடன் வெளியே ஓடினர். கியாஸ் சிலிண்டா குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அங்கு இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32), நிவேதா (21), தமிழரசன் (18), ஜீவானந்தம், சண்முகபிரியன், ஆமோத்குமார் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் 7 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அமோத்குமார் (25), சந்தியா (21) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜீவானந்தம் (50) நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. கியாஸ் சிலிண்டர் குடோன் சாந்தி(48) பெயரில் உள்ளது. இவரது கணவர் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் (54) என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சாந்தி (48), அவரது கணவர் அஜய்குமார், ஜீவானந்தம் (46), மோகன்ராஜ் (38) பொன்னிவளவன் (45) ஆகியோர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர்களில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார், மோகன் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குடோனில் இருந்து அனைத்து சிலிண்டர்களும் அகற்றப்பட்டது. கியாஸ் சிலிண்டர் குடோனுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் தலைமையில் போலீஸ்துறை, வருவாய் துறை, தடவவியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் அடுக்கி வைக்கப்படும் குடோன் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் இதுபோல் கியாஸ் சிலிண்டர் விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கியாஸ் குடோன்களை பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories