December 6, 2025, 4:11 AM
24.9 C
Chennai

சென்னை மெரினா கடற்கரை அருகே தொடரும் குற்ற சம்பவங்கள்..

மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறித்து கடலுக்குள் ஓடிய குற்றவாளியை போலீசார் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் நள்ளிரவு 1:30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார்.அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை பெய்வதால் தாங்களும் இங்கு சற்று நேரம் இருந்துவிட்டு செல்கிறோம் என்று கூறி அங்கு நின்றுள்ளனர்.

அப்போது, திடீரென அந்த பெண்ணை தாக்கிய அந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு காதில் இருந்த தங்க கம்மல், கையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.அப்போது, அந்த வழியாக போலீசார் எதிர்சாலையில் வந்துள்ளனர். அந்த பெண் கூச்சலிடவே 4 பேர் கொண்ட கும்பல் வேகமாக ஓடியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 3 பேர் தப்பியோடிய நிலையில் ஒரு நபர் மெரினா கடற்கரையில் இறங்கி கடலுக்குள் குதித்தார். அந்த நபரை துரத்தி சென்ற போலீசார் கடலுக்குள் குதித்த அந்த நபரை அதிரடியாக பிடித்தனர்.பிடிபட்ட நபர் ஐனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. ஏற்கனவே கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. தப்பியோடிய எஞ்சிய 3 பேரும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய 3 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

500x300 1805683 robber - 2025

மதுபோதையில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி கழுத்தறுத்ததில் பாதிக்கப்பட்ட பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories