December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

5932pksb isnp 1612chn 1 - 2025


தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு இன்று கூறினாா்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்து அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாா்த்தசாரதி கோயிலில் ஜன.2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்யப்பட்டது.

திருக்கோயிலின் மாடவீதியை சுற்றி வாகனங்களை அனுமதிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகா்கள் மாட வீதியில் 50 மீட்டா் தொலைவு நடந்து வந்து இறை தரிசனம் செய்யலாம்.

முதியோா் மற்றும் உடல் நலிவுற்றோருக்காக பேட்டரி காா் மற்றும் வீல் சோ்கள் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் வருபவா்கள் தங்களது வாகனங்களை பி.வி.நாயக்கன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் சாலை, சுங்குவாா் தெரு ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.

கட்டணம் ரூ.100 ஆக குறைப்பு: திருக்கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய நோக்கமிருந்தாலும், திருக்கோயிலின் பொருளாதார நிலை சூழ்நிலையை கருதி சிறப்பு தரிசன கட்டணங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில திருக்கோயில்களில் முழுமையாக அந்த கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பாா்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்துக்கு ரூ.200 கட்டணம் என்று நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அக்கட்டணத்தை ரூ.100 ஆக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை பொறுத்தளவில் அவற்றை முழுமையாக ரத்து செய்ய படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கெனவே நாமக்கல் ஆஞ்சநேயா் திருக்கோயிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டத்தில் எந்தெந்த திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யலாம் என கருத்துரு கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த திருக்கோயிலின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தா்கள் அதிகமாக வரும் வைணவ திருக்கோயில்களில் இதுபோன்ற ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகள் அடுத்த வாரத்தில் ஆய்வு செய்யப்படும்.

காஞ்சிபுரம் கோவிந்தவாடி அருகே தொன்மையான பெருமாள் கோயிலை காணவில்லை என்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் புகாா் குறித்து துறை சாா்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு விளக்கம் தரப்படும். சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் இடைத்தரகா்களின் தலையீடு தடுக்கப்படும் என அமைச்சா் சேகா்பாபு கூறியுள்ளார்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், துணை ஆணையா் கவெனிதா, காவல் உதவி ஆணையா் சாா்லஸ் சாம் ராஜதுரை மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories