சீட்டுப்பணம் வசூலித்து ரூ.37 லட்சம் மோசடி செய்த தம்பதியர் கைது..

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் 20-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டுப்பணம் வசூலித்து ரூ.37 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் எம்.ஜி.ரோடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 68). இவர் பட்டாபிராம் காமராஜர் தெருவை சேர்ந்த சலூன் கடைக்காரரான முருகன் (52) மற்றும் அவரது மனைவி நிர்மலா (46) ஆகியோரிடம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.10 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சீட்டு முடிந்ததையடுத்து, முருகையன் அந்த தம்பதியிடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தருகிறேன் என்று கூறிய முருகன் கடந்த 2015-ம் ஆண்டு திடீரென வீட்டை காலி செய்து விட்டு மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த முருகையன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோரை தேடி வந்தார்.

இந்நிலையில் முருகனும் அவரது மனைவியும் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார், 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய 2 பேரையும் கைது செய்து ஆவடி அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதையடுத்து, அவர்களை கைது செய்து, நேற்று காலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முருகையன் உட்பட அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டு பணம் வசூலித்து மொத்தம் ரூ.37 லட்சம் வரை முருகன் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புதுவண்ணாரப்பேட்டை கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சமூத்திரா தேவி (51). இவர் அதே பகுதியில் வசித்து வரும் சுமதி (55) என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டியுள்ளார். சமுத்திராதேவி உள்பட அவரது நண்பர்கள் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் பணம் கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் ஏலச்சீட்டு முடிந்து 14 மாதங்கள் ஆன நிலையில் சுமதி யாருக்கும் பணம் தராமல் ரூ.5 லட்சம் வரை ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமுத்ராதேவி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சுமதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1043496 cni22dec1821 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories