கருணாநிதி … ஜெயலலிதா… #மரணத்தின்_பாடம்!

Published:

jayalalitha karunanidhi - 2026

கருணாநிதி… ஜெயலலிதா…தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் இருவரும் இரு வருட இடைவெளியில் மறைந்து போனார்கள். ஆனால் இவர்கள் இருவரின் மறைவையும் கிட்ட நின்று பார்க்கும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த இரு வேறு இழப்புகளின் பின்னணியை இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிருந்து கொண்டு, இருவரின் இறுதிப் பயணமும் காட்டுவது என்ன என்பது குறித்து சர்ச்சைகளை நடத்தி வருகிறார்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப் படும் ஒரு கருத்து, வாழ்வின் ஓட்டத்தை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது.

அந்தக் கருத்து…

கருணாநிதியின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.. என்னுடைய மனவோட்டம் இதுதான்?

அவரின் குடும்பம்…. உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்….

கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது. அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்…..இவைகள் தான்.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம்.

ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார்.

கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ….நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான்.

குடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே…

பதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ….எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை…..

கலைஞர் பாதுகாத்தார் …பாதுகாத்து கொண்டார்….ஒட்டு மொத்த குடும்பத்தின்
கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்….

நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்….அவர்களே நம்முடைய சொத்துகள்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

மரணம்இயற்கையானது.. மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது…….ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்……

உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்….நாளை நம்க்கும் மரணம் வரும்….மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்… இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்……

சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ……மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்…..

#மரணத்தின்_பாடம்

Related articles

Recent articles

spot_img