லாரி ஆம்னி வேன் மோதல்: பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் உயிரிழப்பு

accident capita - 2026

திண்டுக்கல்:பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோட்டை சேர்ந்தவர் சசி(62).  நேற்று  மதியம் அவரது மனைவி விஜியம்மா(60), பேரன்கள் அபிஜித்(17), ஆதித்யன்(12), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(62), அவரது மனைவி லேகா(50), மகன் மனு(27),  பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு மனைவி சஜினி(52) ஆகியோருடன் பழனிக்கு மாருதி வேனில் வந்துள்ளார். வேனை சுரேஷ் ஓட்டி வந்துள்ளார்.

திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி அருகே இரவு 12.30மணியளவில் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாரா விதமாக எதிர் திசையில் பழனியில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைக்கு பழைய இரும்பு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

 

இது குறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீஸார் டிஎஸ்பி., முத்துராஜன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். லாரியுடன் வேன் சிக்கியதால்  பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேனை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விபத்தில் வேனில் பயணம் செய்த சசி, லேகா, சுரேஷ், மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  வேனில் இறந்தவர்கள் உடல் கிரேனை கொண்டு வேனை பிரித்த பின்னரே எடுக்க முடிந்தது. பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அபிஜித் வழியிலேயே உயிரிழந்தார்.

மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்ட விஜியம்மா திண்டுக்கலில் விஜியம்மா உயிரிழந்தார்.   பலத்த காயங்களுடன் ஆதித்யன், சஜினி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறி்த்து லாரியை ஓட்டி வந்த பெரியகுளம் தென்கரையை சேர்ந்த ஓட்டுனர் அய்யப்பன் மீது சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories