December 5, 2025, 1:10 PM
26.9 C
Chennai

குருவித்துறை கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு!

gurupeyachi kuruvithurai
gurupeyachi kuruvithurai

மதுரை பகுதி கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மதுரை: மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் ஈஸ்வர பட்டர் தலைமையில் குருபெயர்ச்சி மகா யாகம் நடைபெற்றது.
குரு பகவான், மகர ராசியிலிருந்து- கும்ப ராசிக்கு பெயர்ந்ததை முன்னிட்டு மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை அலங்காரங்கள் நடைபெற்றது. இதேபோல மதுரை மேலமடை சௌபாக்யா ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மஹாயாகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சத்திர வெள்ளாலபட்டி கிராமத்தில் அமைந்துள்ள வலா குருநாதன் கோவில் குருபெயர்ச்சியை ஒட்டி யாகபூஜை நடைபெற்றது.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன.
முன்னதாக, பொது மக்கள் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் தரிசனத்துக்கு ஆட்சியர் அனுமதி அளித்தார்.

gurupeyarchi madurai1
gurupeyarchi madurai1

சோழவந்தான் அருகே, குருவித்துறை குருபகவான் குருபெயர்ச்சி விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, காவல் துறையினர் இரு நாட்களும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தனர். இதனால், பக்தர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதன்பேரில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பாண்டியன், சத்திய கலாவதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன்பின் குருவித்துறை குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கினர். எனினும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர கேட்டுக் கொள்ளப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழாவில் லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது.

சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் புகழ் பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.

குருபெயர்ச்சி விழா இங்கே சிறப்பாக நடைபெறும். இதை முன்னிட்டு, முந்தைய நாள் ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உட்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்து அறநிலையத் துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ் கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன் ராயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன், ரேகா வீரபாண்டி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகா கூடுதல் டிஜிபி ஜெயராமன் லட்சார்ச்சனை யில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இவரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கர்ணன், தொழிலதிபர் எம்.கே. எம்.ராஜா, மணிவேல் உட்பட பலர் வரவேற்றனர்.

சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி, முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு முகாம் அமைத்திருந்தனர். மறுநாளும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்றது. சனிக்கிழமை பகல் 3 மணியளவில் பரிகார மகாயாகம் நடைபெற்றது.

மாலை 6:10 மணி அளவில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, குரு பகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோணா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories