போலீஸ் விசாரணைக்கு பின் காப்பகத்தில் இளைஞர் பலி- சிபிசிஐடி விசாரணை துவங்கியது..

IMG 20220914 WA01311 - 2026
IMG 20220922 WA0112 - 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போலீசாரின் விசாரணைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர்
தங்கப்பாண்டி(30) பி.காம் பட்டதாரியான தங்கபாண்டிக்கு கோகிலா தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்
தங்க பாண்டி சாயப்பட்டறையில் பணிபுரிந்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி தங்கபாண்டி எம்.டி.ஆர் நகரில் செளந்தர பாண்டியன் என்ற சமையல் தொழிலாளியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார் அப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நகை பணத்திற்காக ஆசிரியர் தம்பதியர் படுகொலை செய்யப்பட்டதால் இவரையும் கொள்ளையன் என நினைத்து அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் தங்கபாண்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் சற்று வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது .

எனவே தங்கபாண்டிக்கு மனநிலை சரி இல்லை அவரை காப்பகத்தில் சேருங்கள் என போலீசார் அறிவுத்தியதால் அவரது குடும்பத்தார் தங்கபாண்டியை பிற்பகலில் ராமனுஜபுரத்தில் உள்ள மறு வாழ்வு மையத்தில் சேர்த்தனர் இதனையடுத்து எம்.டி.ஆர் நகர் மக்கள் தாங்கள் பிடித்து குடுத்த நபரை விட்டு விட்டீர்கள் என கூறி தாங்கள் சாலை மறியல் போரோட்டத்தில் ஈடுபடபோவதாக நகராட்சி சேர்மன் சுந்தரலட்சுமி வீட்டை
முற்றுகையிட்டதால் போலீசார் வேறு வழியின்றி மீண்டும் மாலையில் மறு வாழ்வு மையத்தில் இருந்து காவல் நிலையம் அழைத்து வந்தனர் .

ஆனால் தொடர்ந்து அவர் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக கூறி அவரை இரவு மீண்டும் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர் இந்நிலையில் காப்பகத்தில் இருந்த தங்க பாண்டிக்கு செப்டம்பர் 14 அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும்
அவரை காப்பக பணியாளர்களே அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

ஆனால் தங்கப்பாண்டியின் இறப்பில் சந்தேகம்
இருப்பதாக புகார் தெரிவித்து தங்கபாண்டியின் உறவிணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து நீதிபதி முத்து இசக்கி விசாரணை நடத்தினார் நீதிபதி உத்தரவாதத்தின் பேரில் தங்கப்பாண்டி உடலை உடற்கூறாய்வு செய்ய உறவினர்கள் அனுமதித்தனர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட தங்கபாண்டி உடலை
அவரது உறவினர்கள் தற்போதுவரை வாங்க மறுத்து வருகின்றனர்.


சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தங்கபாண்டி உடலை அவரது உறவிணர்கள் இரண்டு நாட்களுக்குள் வாங்க வேண்டுமென
உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது இந்நிலையில் சிபிசிஐடி போலீசாரின் முதல் கட்ட விசாரணை துவங்கியது விருதுநகர் சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் தலைமையில்
சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸார் தங்கபாண்டி மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் முதலில் தங்கப்பாண்டி விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நகர் காவல் நிலையத்திலும் அதைத்தொடர்ந்து எம்.டி.ஆர் நகர் பகுதியிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories