January 18, 2025, 6:41 AM
23.7 C
Chennai

வாடிப்பட்டியில் களரி எடுப்பு உத்ஸவ விழா!

#image_title

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கருப்புசாமி மதுரை வீரன் சுவாமிகள் திருக்கோயிலில் மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு உற்சவ விழா 2 நாட்கள்  நடந்தது. 

முதல் நாள் மாலை 3 மணிக்கு  கோவிலில் இருந்து பெட்டி எடுத்து வாடிப்பட்டி இந்துநாடார் உறவின் முறையினருக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்திற்கு சென்றனர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஆச்சி அம்மன் சாமிக்கு கரகம் ஜோடித்து பெரிய கருப்புசாமி, மதுரை வீரன், சங்கிலி கருப்பு, பட்டகொலைகாரன்,  பூச கருப்பு, ஆண்டி சாமிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலு க்கு வந்தனர்.

நள்ளிரவு12 மணிக்கு சுவாமிகளுக்கு காவு கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இரண்டாம் நாள் காலை8 மணிக்கு அனைத்து சாமிகளும் அருள்வாக்கு கூறுதல் மற்றும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடந்தது.11.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மாலை 3 மணிக்கு அனைத்து சாமிகளும் மழவராயர் பங்காளி மற்றும் சோழகர் மாமன் மைத்துனர் வீடுகளுக்கு  சென்று அருள் பாலித்து மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. இரவு 9 மணிக்கு கரகம் கரைத்தலோடு திருவிழா முடிந்தது.

இதன் ஏற்பாடுகளை, மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு விழா குழுவினர் சோழகர் மாமன் மைத்துனர்கள் செய்திருந்தனர்.

ALSO READ:  பேரிடர் காலங்களில் கட்சிகள் செய்யும் அரசியல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை