மதுரை டூ புனே, தில்லி, மும்பை… கூடுதல் விமான சேவை!

madurai airport - 2026

மதுரை விமான நிலையத்திலிருந்து புதிதாக புனே,டெல்லி, மும்பைக்கு கூடுதல் விமான சேவை ஏற்படுத்த திட்டம் தயார் – என்று, மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை தயார் நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் விமான நிலையத்தில் பணியாளர்கள் உள்ளனர்.
ஆகையால், விரைவில் வெளிநாட்டு சேவைகள் வர வாய்ப்புகள் அதிகம்__ முத்துக்குமார் மதுரை விமான நிலைய இயக்குனர்

மதுரை விமான நிலையத்தில் இன்று விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அதில், விமான பயணிகளை திலகமிட்டு வரவேற்றனர். மேலும், பரதநாட்டியம், மரக்கன்று நடுவிழா, ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில்,

பயணிகள் சேவை தினம் (யாத்திரி சேவா திவஸ்) மதுரை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக மதுரை விமான நிலையத்தில் பயன்களை காண வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி முதல் குளிர்கால அட்டவணை துவங்குகிறது. அதில் புதிதாக சேவைகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புனேக்கு புதிதாக சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, இரவு நேரங்களில் நியூ டெல்லிக்கு விமான சேவைக்கான திட்டமும், நேவி மும்பைக்கும் கூடுதலாக விமான சேவை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச விமான சேவைக்கு தற்போது அழைப்பு இல்லை. ஆனாலும்,
மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவைக்கு தயார் நிலையில் உள்ளது இரவு நேர சேவையில் பணியாளர்கள் உள்ளனர். ஆகையால், விரைவில் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் வர வாய்புகள் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் குறித்த கேள்விக்கு?
பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேசி எல்லோரும் அவர்கள் அனுமதி கிடைத்தால் சேவையில் தொடர வாய்ப்புகள் அதிகம்.

கார்கோ (சரக்கு) சேவைகள் குறித்த கேள்விக்கு, தற்போது ஸ்ரீலங்கா அபுதாபி துபாய் ஒன்றை நகரங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து கார்கோ சேவைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், வெளிநாட்டு சேவைகள் வரும்போது கார்கோ சேவைகள் விரிவுபடுத்தப்படும் என மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார்  கூறினார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories