December 6, 2025, 2:41 AM
26 C
Chennai

கனிமொழியின் தோழி பூங்கோதைக்கு என்ன ஆச்சு? ஏன் தற்கொலை முயற்சி?!

poongothai
poongothai

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இன்று காலை பரபரப்பான தகவல் வெளியானது. அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்டது. இதை அடுத்து அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அண்மையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள் பிரிந்ததை அடுத்து, திமுக மாவட்டங்கள் நான்காக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள்  நியமிக்கப்பட்டனர். தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பூங்கோதைக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்துள்ளது.    

அண்மையில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், பெயரளவுக்கு பங்கேற்ற பூங்கோதை, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு விட்டாராம்.

இந்நிலையில் நேற்று கடையத்தில் நடந்த திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கும் பூங்கோதைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் சிலர் பூங்கோதையை அவதூறாக பேசியுள்ளனர். இதை அடுத்து அவர் கையெடுத்து கும்பிட்டபடி வெளியேறியுள்ளார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பின்னர் கூட்டம் நடைபெற்ற இடத்தில் தரையில் அமர்ந்த பூங்கோதை தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.   அப்போது சிவ.பத்மநாபன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவனு பாண்டியன் உள்ளிட்டோருக்கும் பூங்கோதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேண்டும் என்றே வம்பு வளர்க்கிறீர்களா, வெளியே போய்விட்டு மீண்டும் உள்ளே ஏன் வந்தீர்கள் என ஒருவர் ஆவேசமாகக் கேட்பதும், காலில் கூட விழுகிறேன், ஆளை விடுங்கள் என்பது போல, முன்னால் நிற்பவர்களின் காலைத் தொட்டுத் தொட்டு பூங்கோதை கைகூப்பும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் பூங்கோதை. இந்நிலையில் இன்று காலை அவர் வெகு நேரமாகியும் படுக்கையை விட்டு எழவில்லை சந்தேகத்தில் அவரை எழுப்பிய போது அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தெரியவந்தது. இதையடுத்து அவரை நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்

அங்கு பூங்கோதை ஆலடி அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து, நெல்லை ஷிஃபா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எல்ஏவும் டாக்டருமான பூங்கோதை, சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனை கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கோதையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அதேநேரம் பூங்கோதைக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories