April 29, 2025, 12:04 AM
29.9 C
Chennai

செங்கோட்டையில் சுவாமி விவேகானந்த ஆசிரம முப்பெரும் விழா!

செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் 35வது ஆண்டு விழா, ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125வது ஜெயந்திவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமைதாங்கினார். தொழிலதிபர்கள் பொறியாளா் லிங்கராஜ், சா மில் உரிமையாளா்கள் லால்ஜீபடேல், மோகன்படேல், சீவ்கன்படேல், காந்தி சேவா மைய நிர்வாகி இராம்மோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

ஆசிரம மாணவியா்கள் இறைவணக்கம் பாடினா். தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் சிவராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கோட்டை காந்தி சேவா மைய நிறுவனா் விவேகானந்தன், திருக்குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரி முதல்வா் ஜெயநிலாசுந்திரி, மணிமேகலை மன்றம் பொதுச்செயலாளா் கோதண்டம், செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளளா் இராணிஇராம்மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

ALSO READ:  செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

சின்னமனுார் ஸ்ரீஇராமகிருஷ்ண ஆசிரமம் ஸ்ரீமத்சுவாமி முக்தானந்தஜீ, திண்டுக்கல் ஸ்ரீஇராமகிருஷ்ண ஆசிரம தலைவா் ஸ்ரீமத்சுவாமி நித்யசத்வானந்தஜீ, சங்கரன்கோவில் அன்னபூரணாபுரம் ஸ்ரீஇராமகிருஷ்ணா தவக்குடில் தலைவா் ஸ்ரீமத்சுவாமி ராகவானந்தஜீ ஆகியோர் அருளுரை வழங்கினா்.

அதனை தொடா்ந்து ஆசிரம மாணவ, மாணவியா்கள், ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியா்கள் தென்காசி அன்னை கலை அகடமி மாணவர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நாடகம், நடந்தது.

முன்னதாக பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுபோட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு சமூக ஆர்வலா்கள் பிரபாமுரளி, ரமீலாமோகன்படேல், சந்திரிகாதிலீப்படேல், கான்கதாலலித்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினா். பின்னா் ஆதரவற்ற தாய்மார்கள் சுமார் 50பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.

5 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது, இதனையடுத்து சுவாமி விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ, ஆத்மபிரியா மாதாஜீ ஆசியுரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி, கேந்திர தொண்டா்கள் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன், ஐயப்பன், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னுலிங்கம்(எ)சுதன், செண்பகராஜன் பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செங்கோட்டை சமூக ஆர்வலா் கல்யாணகுமார் நன்றி கூறினார்.

ALSO READ:  ஆச்சரியமளிக்கும் ஆதர்சம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories