மழையால் வீடு சேதம்

Published:

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குமாரசாமிநாடார் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி(வயது 42) ஆட்டோ டிரைவர் . தற்போது நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழையால் இவரது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துது. வீட்டில் உள்ளவர்கள் அருகில் இருந்த உறவினர் வீட்டில் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும்  இந்த சுவர் அருகில் உள்ள தங்கப்பாண்டிஎன்பவர் வீட்டின் சுவர் மீது விழுந்தது. இதில் அவரது வீட்டின் ஒரு சுவரும் விழுந்தது. சம்பவ இடத்தை வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img