தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Published:

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிpக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர்  திருமலை தலைமை வகித்தார் நிர்வாகி அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுகி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  மாணவி அனிதா வரவேற்றார்
அலங்கார மின் விளக்குகளால் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் பங்கேற்ற இயேசு பிறப்பு நாடகம், நடனம் நடந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள் இதர மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிகளை லீனா பென்சிங் தொகுத்து வழங்கினார்
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஆசிரியை திவ்யா வரவேற்றார் ஆசிரியைகள் பங்கேற்ற இயேசு வாழ்க்கை வரலாறு வில்லிசை கச்சேரி, நடன நிகழ்ச்சி மற்றும் மேஜிக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. முதல்வர் திருமலை நன்றி கூறினார்

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img