குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு விற்று சொகுசு வாழ்க்கை..

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு விற்று அதன்மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த நபர் குறித்து போலீசார் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1014234 cbiraid - 2026

திருச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (44). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊர் திரும்பிய பிறகு திருப்பூரில் துணிகளை வாங்கி பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன்மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து அதுகுறித்தான தகவல்களை சிபிஐ-க்கு மத்திய உளவுப்பிரிவினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், ராஜாவினுடைய செயல்பாடுகள் மற்றும் அவர் பதிவேற்றம் செய்துள்ள வெப்சைட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கிடையே ராஜா வீட்டில் சோதனை நடத்த அனுமதி கேட்டு சிபிஐ அதிகாரிகள், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினர். அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து வந்த 4 சி.பி.ஐ அதிகாரிகள் உட்பட 6 பேர், பூமாலைப்பட்டியிலுள்ள ராஜா வீட்டுக்கு வந்து சோதனையில் இறங்கினர். ராஜாவினுடைய செல்போன், லேப்டாப் மற்றும் எலெக்ட்ரிக் சாதனங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

அப்போது இளம் சிறார்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் ராஜா பணம் சம்பாதித்து தெரிய வந்தது அதையடுத்து இந்த ஆபாசப் படங்களையெல்லாம் ராஜா எங்கிருந்து பெற்றார், யார் யாருக்கெல்லாம் அந்த ஆபாசப் படங்களை அனுப்பியிருக்கிறார், அவருடைய பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கின்றனர் என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்த போது ஏற்பட்ட தொடர்பை வைத்து இளம் சிறார்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து ராஜா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிந்திருக்கிறது. மேலும், கடந்த 2 மாதங்களாக கனடா செல்வதற்காக ராஜா ஏற்பாடுகளைச் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சோதனை குறித்து விஷயமறிந்த அதிகாரிகள் கூறியதாவது ராஜாவின் தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். ராஜாவின் தந்தை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ராஜாவின் மனைவி தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். ராஜாவின் செயல்பாடுகள் எதுவும் அவருடைய குடும்பத்தாருக்கே தெரியாமல் இருந்திருக்கிறது. ராஜா வீட்டில் அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த விஷயமறிந்து அவர்களது குடும்பத்தினர் அதிர்ந்து போயிருக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைக்குப் பிறகே மற்ற தகவல்கள் தெரியவரும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories