ஆத்து மண்ணை அள்ளி அள்ளி… எங்க வாழ்க்கைல மண்ண அள்ளிப் போட்டுட்டீங்களே..!

dry well - 2026

எங்கள் வீட்டுக் கிணற்றில் கடந்த 15 ஆண்டுகளாக, சொட்டு நீர் கூட சேராமல், இப்படி வறண்டே கிடக்கிறது. இத்தனைக்கும் காவிரியில் இருந்து வெறும் 200 அடி தொலைவுதான்.

இப்படியான ஒரு நிலைக்குக் காரணம், நரேந்திர மோடியோ, கர்நாடகாவோ கிடையாது.முழுக்க முழுக்க திராவிட ஆட்சிகளின் மணல் கொள்ளை மாஃபியாதான் காரணம். தமிழகத்தின் விவசாயத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது! காவிரிக்காகப் போராடுபவர்கள் ஏன் மணல் கொள்ளை மாஃபியாவை எதிர்த்துப் போராட மறுக்கிறார்கள்? மணல் குவாரிகளை பூட்டு போடும் போராட்டங்களை நடத்த மறுக்கிறார்கள்? – என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் பலர்.

அவர்களில் ஒருவரின் டிவீட் இது…

 

#CauveryIssue இது போல், காவிரியில் மணல் அள்ளி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததில், இப்போது ஆறுகள் மலடாகிவிட்டன. ஆற்றை ஒட்டி இருக்கும் நிலத்திலும் வறட்சி.நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கிணறுகளிலும் நீர் இல்லை. 300 அடிக்குக் கீழ் தோண்டினாலும், போர்வெல் தண்ணீர் வருவதில்லை. இத்தகைய வறட்சி நிலைக்குக் காரணம், திராவிட இயக்கங்களின் பேராசைதானே என்று அறிவார்ந்த கேள்விகளை எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

இது போல்,  திமுக., ஆதரவு ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடவில்லை என்று ஓர் அறிஞர் கேட்டு இருக்கிறார்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் (ஆண்டவன் ஆசிரமம் அருகில் ) சுமார் 225 கோடி ரூபாய் செலவில் மிக பிருமாண்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து ராமநாதபுரம் புதுக்கோட்டை பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுவது , ஸ்ரீரங்கத்து பகுதி மக்கள் பலருக்கு தெரியாது ..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளி மற்றும் புனிதமான சந்திர புஷ்கரணி … உத்திர வீதி மற்றும் சித்திரை வீதியில் எந்த வீடுகளிலும் கிணற்றில் நீர் இல்லை. காரணம் இந்த நீர் ஏற்றும் நிலையமே !!! ஒரே நிமிடத்தில் பல லக்ஷம் லிட்டர் தண்ணீரை உருஞ்சுவதால்!

அரங்கன் ஊரில் இன்று பல வீடுகள் பூட்டப்பட்டு .. அதன் வாசிகள் வாழமுடியாபடி உள்ளது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. சில வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் இட்டாலும் நீர் இல்லை.

லட்ச ரூபாய் செலவு செய்ய முடியாதவர்கள் வீட்டை பூட்டி விட்டு வாடகை வீட்டில் வெளியே வசிப்பது எனக்கு தெரியும். இந்த புத்திசாலி எழுத்தாளர் என்னுடன் வந்தால் இந்த 225 கோடி செலவு செய்த கட்டிய pumping station ஐ அடித்து நொறுக்கி .(டோல் பூத்தை அடித்து ஓடைத்தால் காவேரி மேலாண்மை வாரியம் வரும் என்பதுதானே அறிவு ….. ஸ்ரீரங்கத்தை காக்க நான் தயார் .. இந்த பம்ப் ஸ்டேஷன் அழிந்தால் ஸ்ரீரங்கம் பிழைக்கும் …

ALSO READ:  தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காவேரி வாரியம் என்பது இந்த திராவிட அறிவிலிகளுக்கு என்ன என்று புரியவில்லை.. காவேரி ஆற்றின் ஆரம்பம் முதல் கடலில் கலக்கும் வரை ஆற்றின் அனைத்து அணைகள் மற்றும் அதில் இருந்து பிரியும் உப பாசன வாய்க்கால்கள் வரையிலான எல்லா உரிமைகளும் அதற்க்கான செயல் வரைமுறைகளும் நான்கு மாநில அதிகாரிகள் அனுமதியுடன் நடக்கும்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் ராஜ கோபுரத்தை நெருங்கும் பொது நீங்கள் வரும்போது ஒரு பாலம் தாண்டுவீர்களே, அது ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால். இந்த வாய்கால் மூன்றாம் குலத்துங்க சோழன் காலத்தே 1193 CE இல் கூரநாராயண ஜீயர் வெட்டியது.

அது முன்பு ஸ்ரீரங்கம் மற்றும் திருவனைகா பகுதியில் இருந்த வயல்கள் மற்றும் தோப்புகளுக்கு பாசன நீர் எடுத்து செல்வது. தற்போது அதில் 10 சதவீதம் கூட விவசாயம் இல்லை அனைத்து நிலங்கள் தோப்புகள் வீடுகளாக மாறிவிட்டது ..

இந்த வாய்காலில் நீர் விட அந்த வாரிய வெளி மாநில அதிகாரி நிச்சியம் எதிர்ப்பு தெரிவிப்பார். அதாவது, இருக்கும் மொத்த தண்ணீரில் பாக பிரிவினை செய்யும் போது, இந்த ஐம்பது ஆண்டு முன்பு இருந்த வயல்களை காட்டி நீர் தேவை அளவிட முடியாது .

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இப்படி பாசனமில்லா பாழ் பட்டு இருக்கும் வீடு கட்டி ரியல் எஸ்டேட் தொழில் செய்து விவசாயத்தை பாழ் பண்ணிவிட்டு பாகத்துக்கு சென்று நின்றால் வெறும் கையோடுதான் திரும்ப வேண்டும் ..

திராவிடன் … கன்னடத்துக்காரன் அணையில் தனது உரிமையை நிலை நாட்ட இது பயன் படும் என்று நினைக்கையில், தமிழக வாய்க்காலின் உரிமைகளும் அழித்து போகும் அவல நிலை பற்றி ஒரு பயலும் பேச போவதில்லை ..

அது செயலாக்கப் பட்டால் இந்த வாய்க்கால் அழிந்து போகும் !!! இந்த முட்டாள் தனத்துக்கு .. ஸ்ரீரங்கத்து மக்களை அழைக்கிறார்கள் ..

குறிப்பு :- ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories