June 16, 2025, 12:24 PM
32 C
Chennai

பாதிரியார் மீட்பு- மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி: தமிழிசை

tamilisai-soundararajan ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் மீட்கப்பட்டது, மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். சுமார் 8 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று அங்கிருந்து இந்தியா திரும்பினார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன், நரேந்திரமோடி அரசு, பிற நாடுகளுடன் நட்புடன், நல்ல உறவை மேம்படுத்தி வருகிறது. இதனால்தான், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை காப்பாற்ற முடிந்தது. தற்போது, தாய் உள்ளத்துடன், பாதிரியார் பிரேம்குமார் கடத்தல் விஷயத்தில் நரேந்திரமோடி செயல்பட்டு, அவரை மீட்டுள்ளார். அவ்வாறு மீட்டது மட்டும் இல்லாமல், அவரது தந்தைக்கு போன் செய்து, நேரடியாக அந்த தகவலை கூறியுள்ளார். இதன்மூலம், நாட்டு மக்கள் மீது, நரேந்திரமோடி எந்த அளவு பாசமும், பற்றும் வைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, ராஜதந்திரத்துடன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை வைத்துள்ளார். அவர் இலங்கை செல்வதையும், அந்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதையும், சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை என்ன? என்பது தற்போது, பிரேம்குமார் மீட்கப்பட்டதன் மூலம், விமர்சனம் செய்பவர்களுக்கு நன்கு புரிந்து இருக்கும். பிரேம்குமார் மீட்கப்பட்டதற்காக தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும், பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். – என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories