9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள், குடும்பத்துக்கு ஒரு வீடு: கே.ஏ.செங்கோட்டையன்!

sengottaian - 2026

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம் கரட்டிபாளையம் பெரியகொடிவேரி கெட்டிச்செவியூா் ஆகிய இடங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்!

4500 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி சேலை அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் திருப்பூா் நாடாளுமன்ற உறுப்பினா் சத்தியபாமா மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்,

இந்தியநாடே வியக்கும் அளவிற்கு பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்…

பள்ளிக் கல்வித் துறைக்காக ஒரு ஸ்டியோ உருவாக்கப்படும். கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி சேனல் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எல்லா மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது. 11,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் 12ஆம் வகுப்பு முடித்துச் சென்ற மாணவா்களுக்கும் ஜனவரி மாதம் இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

9,10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு பிறகு அறிவிக்கப்படும்.

மாணவா்கள் ஆங்கில பயிற்சி பெற வரும் கல்வியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரும் 21ஆம் தேதி எல்கேஜி யூகேசி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது

மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம்
தொகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

கோபி நகராட்சிக்கு புதிய குடிநீா் திட்டத்திற்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீடற்றவா் குடும்பங்களுக்கு குடும்பத்துக்கு ஒரு வீடு வழங்கம் நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளது என்றார் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

கே.ஏ.செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories