கூட்டணி கூட்டணின்னு கூப்டு அணி அமைக்கிறாங்க மக்களே! நான் சொல்லுறது புரியுதா? உங்களுக்கு புரியுது. ஆனா இந்த பத்திரிகைக்காரங்களுக்கு புரிய மாட்டேங்குது. சும்மா. அங்க போனா ஒரு கேள்வி.. இங்க வந்தா ஒரு கேள்வின்னு.. பிச்சி எடுக்கறாங்க மக்களே! அவங்களுக்கு புரிய மாதிரில்லாம் எழுதிக்கறாங்க. அதான் மக்களே நான் தெளிவா இப்போ உங்ககிட்ட சொல்லுறேன்..
நீங்களே சொல்லுங்க .. நாம கூட்டணி போடலாமா… இல்லை கூட்னி இல்லாமே பலம் வாய்ந்த அணியா தனியா நிக்கலாமா? என்ன மக்களே நீங்களே சொல்லுங்க. இப்டி ஜனநாயகமா எந்த கட்சிலயாவது இருக்காங்களா? தொண்டர்கள் கருத்தறிந்து பேசுற தலைவரு யாராச்சும் இருக்காங்களா மக்களே! ஆனா எங்க தொண்டர்கள் எப்படிப் பட்டவங்கண்ணா… தலைவர் என்ன சொல்றாரோ அதைக் கேட்டு நடப்பாங்கங்கிறதை மத்த கட்சிகளுக்கு சொல்லிக்கறேன். தேர்தல் நாள் அன்றுதான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் மக்களே! நீங்களும் இதை ஏத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும்….!
பின் குறிப்பு : நம்ம கற்பனைதான்… ஆனா… இப்படியும் கூட நடக்கலாம்…!



