தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.
அ.தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக இருந்தவர் தனபால். கடந்த சட்டசபை தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
நேற்று சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனபாலுடன் போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.




