ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: மனுத் தாக்கல் முன்பே தேர்தல் பணிகள் மும்முரம்!.

500x300 1825206 erodeelection 1 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி
இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி  27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல்
பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.238 வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக 882 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் பின்னர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அறிவிக்காமல் பாஜக மவுனம் காத்து வருகிறது.கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்தார். அதிமுக பிரிந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள், 98.5% பேர் ஒரே அணியில்தான் இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாட்களுக்குள் முடிவு தெரியும் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரனும் தன்பங்குக்கு வேட்பாளரை அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தனது வேட்பாளராக நடிகர் பாக்யராஜை அறிவிக்கலாம் என தெரியவந்துள்ளது.மநீமை நடிகர் கமல்ஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கரம்‌நீட்டிவிட்டார்.பாமக,சமக மற்றும் உதிரி கட்சிகள் களம் காணாமல் ஒதுங்கி கொண்டது.
இன்று வரை தொகுதியில் காங்கிரஸ் அசுரபலத்துடன் இருக்கிறது.

bh19vote 1901chn 143 3 - 2026


இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 238 வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்த சுமார் 1408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.

வாக்கு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம்  கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 286 கட்டுப்பட்டு இயந்திரங்கள், 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.பிப்ரவரி 27-ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 238 வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக 882 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

images 88 2 - 2026
மகன் மறைவால் களத்தில் ஈவிகேஎஸ்இ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories